"உங்கள் பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள்": முற்றுகையிட்ட மக்களிடம் நடிகர் விவேக் பதில்

நீலகிரி: நீலகிரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம், உங்களது பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம், உங்களது பிரச்சனைகளை அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பல பகுதிகளில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதற்கட்டமாக, உதகையில் உள்ள ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் விழாவில் பங்கேற்ற அவர், காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் காலனிக்கு குப்பைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார்.

அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்க இருந்த நிலையில், அப்பகுதி மக்கள் நடிகர் விவேக்கை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், கழிப்பறை வசதிகள் ஏதும் சரிவர பராமரிப்பது இல்லை என நடிகர் விவேக்கிடம் கோரிக்கை வைத்தனர்.



இதை சற்றும் எதிர்பாராத விவேக், 'தான் எந்த விதமான அரசியல் கட்சியையும் சாராதவன், ஐயா அப்துல்கலாம் பாணியில் சமூக பணிகளை மேற்கொள்பவன், அதனால், உங்கள் பிரச்சனைகளை இங்கு உள்ள அரசியல்வாதிகளிடம் கூறுங்கள்' என நகைச்சுவை பாணியில் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...